லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எதிர்நீச்சல் கதை முற்றிலும் மாறுகிறது : நடிகை பார்வதி!

எதிர்நீச்சல் கதை முற்றிலும் மாறப்போவதாக ஜனனி பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை பார்வதி தெரிவித்துள்ளது குறித்து...

News image
எதிர்நீச்சல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை பார்வதி- படம் - இன்ஸ்டாகிராம்
Updated On :11 மார்ச் 2026, 10:39 am

இணையதளச் செய்திப் பிரிவு

எதிர்நீச்சல் கதை முற்றிலும் மாறப்போவதாக ஜனனி பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.

எதிர்நீச்சலில் புதுப்புது நடிகர்கள் அறிமுகமாகவுள்ளதாகவும் அவர்களை மையப்படுத்தி தொடரின் கதை முற்றிலும் மாறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால், இத்தொடருக்கு 'எதிர்நீச்சல் தொடர்கிறது' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டுக்கு திருமணமாகிச் செல்லும் மருமகள்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

இத்தொடரில் நடிகை பார்வதி, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

டிஆர்பிக்காக புதிய பாத்திரங்களை எதிர்நீச்சல் - 2 தொடர் அறிமுகம் செய்து வந்தாலும், கதையின் விறுவிறுப்பு குறையாமல் இருப்பதால், தொடர்ந்து மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

எதிர்நீச்சல் தொடரிலிருந்து....

எதிர்நீச்சல் தொடரிலிருந்து....

எனினும் எதிர்நீச்சல் முதல் பாகத்திற்கு கிடைத்த டிஆர்பி புள்ளிகளை முந்த முடியவில்லை. இதனால், கதையில் பல மாற்றங்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை பார்வதி,

''எதிர்நீச்சல் தொடர் முற்றிலும் மாறப்போகிறது. புதுப்புது பாத்திரங்கள் அறிமுகமாகவுள்ளன. அவர்களுக்கான திரைக்கதை மூலம் கதை முற்றிலும் மாறப்போகிறது. முன்பை விட அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதான் எதிர்நீச்சலுக்கு இப்போதைக்கான அப்டேட் '' எனக் குறிப்பிட்டார். இதனால் தொடரின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

summary

Ethirneechal Update: Ethirneechal serial story change completly says Actress Parvathy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.