குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

எதிர்நீச்சல் கதை முற்றிலும் மாறுகிறது : நடிகை பார்வதி!

எதிர்நீச்சல் கதை முற்றிலும் மாறப்போவதாக ஜனனி பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை பார்வதி தெரிவித்துள்ளது குறித்து...

News image

எதிர்நீச்சல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை பார்வதி - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :11 மார்ச் 2026, 10:39 am

எதிர்நீச்சல் கதை முற்றிலும் மாறப்போவதாக ஜனனி பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.

எதிர்நீச்சலில் புதுப்புது நடிகர்கள் அறிமுகமாகவுள்ளதாகவும் அவர்களை மையப்படுத்தி தொடரின் கதை முற்றிலும் மாறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால், இத்தொடருக்கு 'எதிர்நீச்சல் தொடர்கிறது' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டுக்கு திருமணமாகிச் செல்லும் மருமகள்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

இத்தொடரில் நடிகை பார்வதி, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

டிஆர்பிக்காக புதிய பாத்திரங்களை எதிர்நீச்சல் - 2 தொடர் அறிமுகம் செய்து வந்தாலும், கதையின் விறுவிறுப்பு குறையாமல் இருப்பதால், தொடர்ந்து மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

எதிர்நீச்சல் தொடரிலிருந்து....

எதிர்நீச்சல் தொடரிலிருந்து.... - படம் - இன்ஸ்டாகிராம்

எனினும் எதிர்நீச்சல் முதல் பாகத்திற்கு கிடைத்த டிஆர்பி புள்ளிகளை முந்த முடியவில்லை. இதனால், கதையில் பல மாற்றங்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை பார்வதி,

''எதிர்நீச்சல் தொடர் முற்றிலும் மாறப்போகிறது. புதுப்புது பாத்திரங்கள் அறிமுகமாகவுள்ளன. அவர்களுக்கான திரைக்கதை மூலம் கதை முற்றிலும் மாறப்போகிறது. முன்பை விட அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதான் எதிர்நீச்சலுக்கு இப்போதைக்கான அப்டேட் '' எனக் குறிப்பிட்டார். இதனால் தொடரின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Summary

Ethirneechal Update: Ethirneechal serial story change completly says Actress Parvathy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.