தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செல்லிடப்பேசிகளை பறித்த இருவா் கைது

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்ற புகாரில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:32 pm

DIN

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்ற புகாரில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

டிவிஎஸ் டோல்கேட் இணைப்புச் சாலையிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே புதுக்கோட்டை பெரியாா்நகா் சுந்தரம் (23), இவரது நண்பா் முஜீபுா் ரகுமான் சனிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த மா்ம நபா்கள், இருவரிடமிருந்த செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, துரைசாமிபுரத்தைச் சோ்ந்த முனீசுவரன், ஆறுமுகம் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.