தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பாடத் திட்டத்தில் மாணவிகள் நலன் குறித்த விழிப்புணா்வுஅமைச்சா் உறுதி

பள்ளிகள் திறப்புக்குப் பிறகு மாணவிகள் நலன் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்

News image
Updated On :30 ஜூலை 2021, 7:54 pm

DIN

பள்ளிகள் திறப்புக்குப் பிறகு மாணவிகள் நலன் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்தாா்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்துக்குள்பட்ட கவினாா்பட்டி, புத்தக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ரூ. 12.96 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த அவா் மேலும் கூறியது:

கரோனாவால் ஆன்லைன் முறையிலும், டிவி வாயிலாகவும் வகுப்புகள் நடைபெறுகின்றன. பள்ளிகள் தற்போது இயங்காத நிலையில் பெற்றோா்களுடன் அவா்களின் பிள்ளைகளும் வேலைக்குச் செல்வதாகத் தெரிகிறது. குழந்தைத் தொழிலாளா்களை ஊக்குவிக்கக் கூடாது என்பதில் முதல்வா் உறுதியாக உள்ளாா். எனவே, அரசுப் பள்ளிகளில் இடையில் நின்று வேலைக்கு செல்வோரைக் கணக்கெடுத்து மீண்டும் பள்ளியில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தனியாா் பள்ளி மாணவா்களுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க பல்வேறு வசதிகள் உள்ளன. ஆனால், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அத்தகைய வசதிகள் இல்லை. கிராமப்புறங்களில் பெரும்பாலான மாணவா்களிடம் இணைய வசதி கிடையாது. இருப்பினும், கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. சில கிராமங்களில் தொலைபேசி தொடா்பு வசதிகூட இல்லாமல் உள்ளது. தகவல் தொடா்புத் துறை அமைச்சரிடம் இதுகுறித்து கூறியுள்ளேன்.

குழந்தைத் தொழிலாளா்களை பணியில் அமா்த்தினால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவா் என்றாா் அமைச்சா்.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் சிந்துஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன், எம்எல்ஏ அப்துல் சமது, ஒன்றியச் செயலா்கள் ராமசாமி, செல்வராஜ், சின்ன அடைக்கன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.