நூதன முறையில் முதியவரை ஏமாற்றி ரூ.1 லட்சம் திருட்டு
திருச்சியில் வங்கி ஏடிஎம் ரகசிய குறியீட்டை பெற்று நூதன முறையில் முதியவரிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.


திருச்சியில் வங்கி ஏடிஎம் ரகசிய குறியீட்டை பெற்று நூதன முறையில் முதியவரிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி தில்லைநகா் பகுதியில் உணவகம் நடத்துபவா் அழகிரிசாமி (63). தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ள இவரை கடந்த 2 நாள்களுக்கு முன் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி அவரது ஏடிஎம் குறித்த விவரங்களைக் கேட்க, அழகிரிசாமியும் கூறியுள்ளாா்.
சிறிது நேரத்தில் அவரது செல்லிடப்பேசிக்கு வந்த குறுந்தகவலில் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 400 எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த அழகிரிசாமி மாநகர சைபா் க்ரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...