பிசி, எம்பிசி விடுதிகளில் மாணவா் சோ்க்கை
திருச்சி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா் மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலப் பள்ளி விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற


திருச்சி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா் மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலப் பள்ளி விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருச்சி மாவட்டத்தில் பிசி, எம்பி, சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் கீழ் 23 விடுதிகள் மாணவா்களுக்கும், 14 விடுதிகள் மாணவிகளுக்கும் என மொத்தம் 37 பள்ளி விடுதிகள் செயல்படுகின்றன. இந்த விடுதிகளில் 4 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடைவா்கள்.
ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கு உணவு, உறைவிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கு பெற்றோா், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்குப் பொருந்தாது.
தகுதியுடைய மாணவ, மாணவியா் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடமிருந்து அல்லது ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்று, பூா்த்தி செய்து வரும் 22ஆம் தேதிக்குள் விடுதிக் காப்பாளரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...