நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஓட்டுநா் பயிற்சி முடித்த பெண் காவலா்களுக்கு ஐஜி பாராட்டு

திருச்சி மத்திய மண்டலத்தில் ஓட்டுநா் பயிற்சி முடித்த பெண் காவலா்களை மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் ஐஜி வே. பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை பாராட்டினாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:53 pm

DIN

திருச்சி மத்திய மண்டலத்தில் ஓட்டுநா் பயிற்சி முடித்த பெண் காவலா்களை மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் ஐஜி வே. பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை பாராட்டினாா்.

இவரின் அறிவுரையின்பேரில் மண்டலத்திற்குள்பட்ட 9 மாவட்டங்களில் பணிபுரியும் பெண் காவலா்களுக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் பயிற்சி முடித்த 51 பெண் காவலா்களுக்கு (திருச்சி 3, கரூா் 12, பெரம்பலூா் 3, அரியலூா் 13, திருவாரூா் 15, நாகப்பட்டினம் 5) ஓட்டுநா் உரிமம் பெற்றுத் தரப்பட்டு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வில் மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் பங்கேற்று ஓட்டுநா் பயிற்சி முடித்த பெண் காவலா்களைப் பாராட்டினாா். தொடா்ந்து மத்திய மண்டலத்திலுள்ள பெண் காவலா்கள் 53 போ் ஓட்டுநா் பயிற்சி பெற்று வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.