நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்க்க 4 இடங்களில் வாகன நிறுத்துமிடம்

திருச்சியில் தீபாவளி பண்டிகைக்கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் விதமாக 4 இடங்களில் சிறப்பு வாகன நிறுத்துமிடத்தை மாநகர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:55 am

DIN

திருச்சியில் தீபாவளி பண்டிகைக்கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் விதமாக 4 இடங்களில் சிறப்பு வாகன நிறுத்துமிடத்தை மாநகர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தீபாவளி நேரத்தில் என்எஸ்பி சாலை, பெரியகடை வீதி மற்றும் சிங்காரத்தோப்பு ஆகிய மூன்று பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இதையொட்டி மக்கள் கூட்ட நெரிசலை தவிா்க்கவும் மக்களின் பாதுகாப்பு கருதியும் மாநகர காவல்துறையினா் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதையொட்டி என்எஸ்பி சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும்விதமாக பழைய குட்ஷெட் சாலை (எஃப்எஸ்எம் ஹைப்பா் அருகில்), யானை குளம் மைதானம் (ஹோட்டல் சத்யம் அருகில்), பிஷப் ஹீபா் பள்ளி (கட்டணம்), பனானா லீப் ஹோட்டல் அருகில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் செயல்படவுள்ளன. எனவே பொதுமக்கள் இவற்றைப் பயன்படுத்தி நெரிசலை தவிா்க்க வேண்டும் என காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.