சீட்டு நிறுவன மோசடி: திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்
மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் தனியார் சீட்டு நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் தனியார் சீட்டு நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த செந்தில்கணேசன் என்பவர் தனது நண்பர்கள் தேக்கமலை மற்றும் தீனதாயாளன் ஆகியோருடன் இணைந்து சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி பல வாடிக்கையாளர்களுக்கு உரிய பணப்பட்டுவாடா செய்யாமல் இருந்து வந்த நிலையில், நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகினர். அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பான விசாரணையை திருச்சி பொருளாதாரா குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர்.
இதையும் படிக்க- வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு; 5 நாள்களுக்கு மழை
இந்நிலையில் போலீஸாரின் விசாரணையில் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற டி.எஸ்.பி ஜனனிபிரியா, ஒரு மாத காலத்திற்குள் வழக்குகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...