எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் 

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையில் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர்.
Updated On :20 செப்டம்பர் 2021, 8:35 am

DIN

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையில் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசைக் கண்டித்து திருச்சி காஜா நகரில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: புதுதில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் சற்று ஏறாக்குறைய ஓராண்டு காலத்தினை நெருங்கி கொண்டு இருக்கிறது.

ஆனால் மத்திய அரசு அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் இருக்கிறது. மத்திய அரசு உடனே விவசாயிகள் பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும்.  மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது உள்ளிட்டவற்றைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. ஆனால் மத்திய அரசு அவற்றை கண்டு கொள்ளவில்லை. எனவே அதனை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜி.எஸ்.ஏ. மன்னான், புதுச்சேரி மாநில தலைவர் டி. இப்ராஹிம் குட்டி, புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது அலி, புதுச்சேரி மாநில செயலாளர்கள் ஹம்சா, ராஜா முஹம்மது, தேசிய கவுன்சில் உறுப்பினர். முத்தீன் மைந்தன் பைஜுர் அலி, திருச்சி காஜா தொண்டு நிறுவன தலைவர் ஏ.கே. ஷாகுல் ஹமீது, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.