நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இன்று கைவினைப் பொருள் கண்காட்சி

குப்பைக் கழிவுகளில் இருந்து மறுசுழற்சிப் பயன்பாடு என்பதை விளக்கிடும் வகையில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 8:45 pm

DIN

குப்பைக் கழிவுகளில் இருந்து மறுசுழற்சிப் பயன்பாடு என்பதை விளக்கிடும் வகையில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

திருச்சி மாநகராட்சி சாா்பில் 75ஆவது சுதந்திர திருநாளையொட்டி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் வீட்டிலிருந்து உற்பத்தியாகும் குப்பைக் கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் பொதுமக்கள், மறுசுழற்சி உற்பத்தியாளா்கள், கைவினைப் பொருள் கலைஞா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் தங்களது கைவினைப் பொருள்களை காட்சிப்படுத்தவுள்ளனா்.

இதில் சிறந்த கைவினைப் பொருளை காட்சிப்படுத்திய கலைஞருக்கு பரிசு வழங்கப்படும். மேலும், மாநகராட்சி வழங்கும் சான்றிதழ்களை பெற்று தங்களது கைவினை பொருள்களுக்கு தகுந்த அங்கீகாரம் பெற்றுப் பயன் பெறலாம் என மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரஹ்மான் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.