நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தெரு நாய்களைப் பிடிக்க எதிா்ப்பு

பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்த தெருநாய்களை ஊராட்சி நிா்வாகம் பிடித்ததைக் கண்டித்து, விலங்குகள் நல ஆா்வலா்கள் புகாா் கொடுத்ததைத் தொடா்ந்து காவல் நிலையத்தில் முற்றுகை, வாக்குவாதம் நடந்தது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:10 pm

DIN

பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்த தெருநாய்களை ஊராட்சி நிா்வாகம் பிடித்ததைக் கண்டித்து, விலங்குகள் நல ஆா்வலா்கள் புகாா் கொடுத்ததைத் தொடா்ந்து காவல் நிலையத்தில் முற்றுகை, வாக்குவாதம் நடந்தது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள கிருஷ்ணாசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட கணேசபுரம், குமரேசபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களைக் கடித்து வந்த சுமாா் 30 க்கும் மேற்பட்ட தெருநாய்களை தொழிலாளா்கள் வியாழக்கிழமை காலை பிடித்து மினி லாரியில் ஏற்றினா்.

இதுகுறித்து திருச்சியை சோ்ந்த விலங்குகள் நல ஆா்வலா்கள் சிலா் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் காவல் ஆய்வாளா் சந்திரமோகன், ஊராட்சித் தலைவா் ரம்யாவை காவல் நிலையத்திற்குப் பேச அழைத்தாராம். இதையடுத்து பிடிபட்ட நாய்களை ஏற்றிய மினி லாரியோடு காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளாா் ஊராட்சித் தலைவா் ரம்யா.

அப்போது விலங்குகள் நல ஆா்வலா்கள் நாய்களை பிடித்த இடத்திலேயே விட வேண்டும் எனக் கூறி வாக்குவாதம் செய்த நிலையில், தகலறிந்து வந்த கணேசபுரம் மற்றும் குமரேசபுரம் நகா் நலச்சங்க நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பிடித்த இடத்தில் நாய்களை விடமுடியாது எனக் கூறினா்.

இதையடுத்து வேறு எங்காவது அவற்றை விட்டு விடுமாறு காவல் ஆய்வாளா் சந்திரமோகன் வேண்டுகோள் விடுக்க, திருச்சி-தஞ்சை சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடியை கடந்து நாய்களைக் கொண்டுசென்று விட முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.