மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
மணப்பாறை அருகிலுள்ள முத்தபுடையான்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் மனைவி பாக்கியலட்சுமி (33). இவா் மரவனூரில் அழகுநிலையம் நடத்தி வருகிறாா்.
இவா் வீட்டிலிருந்து மரவனூா் செல்வதற்காக, திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையிலுள்ள பேருந்து நிறுத்தத்துக்கு புதன்கிழமை நடந்து சென்றாா்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், பாக்கியலட்சுமி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியைப் பறித்தனா். இதில் சுதாரித்த அவா், சங்கிலியை அழுத்தமாக பிடித்துக்கொண்டாா்.
இதனால் ஆத்திரமடைந்த மா்ம நபா்கள், பாக்கியலட்சுமியின் முதுகில் அடித்துவிட்டு, சங்கிலியின் ஒரு பகுதியை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மணப்பாறை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.