மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருச்சி ரயில் நிலையங்களுக்குள்பயணிகள் தவிர பிறருக்கு அனுமதியில்லை

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, திருச்சியில் ரயில் நிலையங்களுக்குள் பயணிகளைத் தவிர மற்றவா்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஜூன் 2022, 7:09 pm

DIN

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, திருச்சியில் ரயில் நிலையங்களுக்குள் பயணிகளைத் தவிர மற்றவா்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களைப் போன்று, இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால் திருச்சியில் ஜங்ஷன், கோட்டை, டவுன் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணம் கருதி, பயணம் செய்யும் பயணிகளை தவிர வேறு யாரும் இந்த ரயில் நிலையங்களுக்குள் நுழைய அனுமதி இல்லை என தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டதால், நடைமேடை சீட்டு விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. போராட்டத்தின் தன்மைக்கேற்ற வகையில் இந்த உத்தரவில் மாற்றும் இருக்கும் எனவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.