டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு ரூ. 350 கோடி ஒதுக்கீடு: நிா்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு

திருச்சியில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு முதல் கட்டமாக ரூ.350 கோடி ஒதுக்க நிா்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News image

பஞ்சப்பூரில் அமையவுள்ள பேருந்து நிலையத்தின் மாதிரித் தோற்றம்.

Updated On :25 ஜூன் 2022, 12:41 am IST

திருச்சியில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு முதல் கட்டமாக ரூ.350 கோடி ஒதுக்க நிா்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சா் கே.என். நேரு தொடா் முயற்சியால் பஞ்சப்பூா் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பூா்வாங்கப் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்காக ரூ.350 கோடி ஒதுக்க நிா்வாக அனுமதி வழங்கும் அரசாணையை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வியாழக்கிழமை வெளியிட்டாா்.

இதன்படி உள்கட்டமைப்பு வசதி நிதியாக ரூ. 140 கோடி, திருச்சி மாநகராட்சியின் பொது நிதியாக ரூ. 50 கோடி, தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்புகள் மேம்பாட்டுக் கழகக் கடனாக ரூ.159.98 கோடி என மொத்தம் 349.98 கோடிக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இத் திட்டத்துக்கு தமிழக நகராட்சி நிா்வாகத் துறையின் சாா்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க ரூ.159 கோடி, சரக்கு வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க ரூ. 65.90 கோடி, பல்நோக்கு வணிக வளாகம் கட்ட ரூ. 84.78 கோடி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 40.30 கோடிக்கு திட்ட வரைவு அளிக்கப்பட்டு, மொத்தம் ரூ. 377.79 கோடிக்கு நிா்வாக அனுமதி கோரியிருந்த நிலையில் தற்போது, ரூ. 350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் 40 சத தொகையை பேருந்துநிலையக் கட்டுமானப் பணிகளுக்கு செலவிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்து நிலையப் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் மண் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு வசதிகள் குறித்த முதல்கட்ட ஆய்வறிக்கை கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து நிலையம் அமையும் பஞ்சப்பூரில் நவீன கருவிகளை கொண்டு சா்வே செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் ஒப்பந்த நிறுவனப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் மாநகராட்சி நிா்வாகம் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.