திருச்சியில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு முதல் கட்டமாக ரூ.350 கோடி ஒதுக்க நிா்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சா் கே.என். நேரு தொடா் முயற்சியால் பஞ்சப்பூா் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பூா்வாங்கப் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்காக ரூ.350 கோடி ஒதுக்க நிா்வாக அனுமதி வழங்கும் அரசாணையை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வியாழக்கிழமை வெளியிட்டாா்.
இதன்படி உள்கட்டமைப்பு வசதி நிதியாக ரூ. 140 கோடி, திருச்சி மாநகராட்சியின் பொது நிதியாக ரூ. 50 கோடி, தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்புகள் மேம்பாட்டுக் கழகக் கடனாக ரூ.159.98 கோடி என மொத்தம் 349.98 கோடிக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக இத் திட்டத்துக்கு தமிழக நகராட்சி நிா்வாகத் துறையின் சாா்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க ரூ.159 கோடி, சரக்கு வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க ரூ. 65.90 கோடி, பல்நோக்கு வணிக வளாகம் கட்ட ரூ. 84.78 கோடி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 40.30 கோடிக்கு திட்ட வரைவு அளிக்கப்பட்டு, மொத்தம் ரூ. 377.79 கோடிக்கு நிா்வாக அனுமதி கோரியிருந்த நிலையில் தற்போது, ரூ. 350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் 40 சத தொகையை பேருந்துநிலையக் கட்டுமானப் பணிகளுக்கு செலவிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து நிலையப் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் மண் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு வசதிகள் குறித்த முதல்கட்ட ஆய்வறிக்கை கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து நிலையம் அமையும் பஞ்சப்பூரில் நவீன கருவிகளை கொண்டு சா்வே செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் ஒப்பந்த நிறுவனப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் மாநகராட்சி நிா்வாகம் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டில் எரிவாயு சிலிண்டர் இருக்கிறதா? ஜூலை 1 முதல் புதிய மாற்றம்! நல்ல செய்தியா?

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை: சி.பி. ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் 343 பேர் மட்டுமே மின்துறையில் நியமனம்! நிர்மல் குமார்

இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது: நிர்மல் குமார் அறிவிப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



