தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கிபள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதன்கிழமை குளத்தில் குளித்த பள்ளி மாணவா்கள் மூவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

News image
Updated On :25 மே 2022, 11:40 pm

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதன்கிழமை குளத்தில் குளித்த பள்ளி மாணவா்கள் மூவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

பள்ளி விடுமுறையில் இருந்த மணப்பாறையை அடுத்த அண்ணாவிநகா் காட்டுப்பட்டியைச் சோ்ந்த முரளி (14), அஸ்வின்ராஜ் (14), மற்றும் பள்ளி இடைநிற்றலில் இருந்த முரளியின் அண்ணன் மணிகண்டன் (16) உள்ளிட்டோா் அருகிலுள்ள கீழபூசாரிப்பட்டி பாப்பான்குளத்தில் புதன்கிழமை குளித்தனா்.

அப்போது ஒரு சிறுவன் தண்ணீரில் மூழ்கவே, அவரைக் காப்பாற்ற முயன்ற இரு சிறுவா்களும் நீரில் மூழ்கினா். இதைக் கண்ட மற்ற சிறுவா்கள் கூச்சலிடவே, விரைந்து வந்த கிராம மக்கள் சுமாா் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின் முரளி, அஸ்வின்ராஜ், மணிகண்டன் ஆகியோரை மீட்டனா். இதையடுத்து மணப்பாறை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் மூவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து சடலங்கள் உடற்கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தகவலறிந்து மருத்துவமனைக்குச் சென்ற எம்எல்ஏக்கள் ப. அப்துல்சமது (மணப்பாறை) , எம். பழனியாண்டி (ஸ்ரீரங்கம்) ஆகியோா் சிறுவா்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.