ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சசிகலாவின் கார் கண்ணாடி உடைப்பு! ஃபாஸ்ட்டேக் சர்ச்சை

சுங்கச்சாவடியில் தானியங்கி தடுப்பு சசிகலா காரின் கண்ணாடி மேல் பட்டு, கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் ஆதரவாளர்கள் சுங்க சாவடியை முற்றுகையிட்டனர்.

News image
Updated On :9 ஜூலை 2022, 10:48 am

DIN

திருச்சி: சுங்கச்சாவடியில் தானியங்கி தடுப்பு சசிகலா காரின் கண்ணாடி மேல் பட்டு, கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் ஆதரவாளர்கள் சுங்க சாவடியை முற்றுகையிட்டனர்.

சசிகலா சென்னையில் இருந்து காரில் தஞ்சைக்கு சென்று கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை 2 மணியளவில், திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடியில் கடந்த போது  தானியங்கி தடுப்பு காரின் கண்ணாடி மேல் பட்டதால் காரின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சசிகலா காரை நிறுத்திய நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர்.

YouTube video thumbnail

இந்நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் துவாக்குடி காவல் நிலைய காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்பாராத விதமாக நடந்து விட்டதாக கூறி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல் துறையினரிடம் விசாரித்தபோது, சசிகலாவின் காரில் ஃபாஸ்ட்டேக் இல்லை என்றும், விஐபிக்காக ஒதுக்கப்பட்ட 11 ஆம் எண் பாதையிலும் செல்லாததன் காரணமாகவே இது போன்று நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.