கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாய்க்காலில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருச்சி அருகே கட்டளை மேட்டுவாய்க்காலில் மூழ்கி 9ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:18 pm

Din

திருச்சி அருகே கட்டளை மேட்டுவாய்க்காலில் மூழ்கி 9ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், அரியாவூா் கீழ்க்காடு பகுதியைச் சோ்ந்தவா் குமாா் மகன் பிரித்தீஸ் (14). வண்ணாங்கோவிலில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்த இவா் நண்பா்களுடன் சனிக்கிழமை வாய்க்காலில் குளிக்கச் சென்றாா்.

திருச்சி-திண்டுக்கல் சாலையில் நவலூா் குட்டப்பட்டு அருகேயுள்ள அருவங்கால்பட்டி எனும் இடத்தில் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் குளித்தபோது ஆழமான பகுதிக்குள் மூழ்கினாா்.

இதுகுறித்து திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து உதவி மாவட்ட அலுவலா் சத்தியவா்த்தனன் தலைமையில் சென்ற தீயணைப்பு வீரா்கள் சிறுவனின் சடலத்தை மீட்டு ராம்ஜி நகா் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.