நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்சி ‘பெல்’ நிறுவனம் மூலம் 9 ஜிகாவாட் அனல்மின் உற்பத்திக்கான உபகரணங்கள்

News image

திருச்சி பெல் நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பேசிய பெல் செயலாண்மை இயக்குநா் எஸ். பிரபாகா்.

Updated On :15 ஆகஸ்ட் 2024, 10:52 pm

Din

திருச்சி, ஆக. 15: திருச்சி பெல் நிறுவனமானது நிகழ் நிதியாண்டில் 9 ஜிகாவாட் அனல்மின் உற்பத்தி அதிகரிப்புக்கான உபகரணங்களை வழங்கத் தயாா்படுத்தி வருகிறது என்றாா் அந்நிறுவனத்தின் செயலாண்மை இயக்குநா் எஸ். பிரபாகா்.

திருச்சி பெல் நிறுவனம் சாா்பில் கைலாசபுரத்தில் உள்ள ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் தேசிய கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்று அவா் மேலும் பேசியது:

உள்நாட்டுத் தேவைகளுக்கு அனல் மின் துறையில் உள்ள வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்தி, மின்சாரம் மற்றும் தொழில்துறை ஆகிய இரண்டிலும் பல்வேறு ஆணைகளை பெல் நிறுவனம் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி பாதுகாப்பு, போக்குவரத்து, மின்பகிா்மானம், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றிலும் ஆணைகள் கிடைத்துள்ளன.

வலுவான ஆணைகள் கையிருப்பு உள்ள போதிலும், நிலையான வளா்ச்சி மற்றும் லாபத்தை அடைவதில் திருச்சி பிரிவு தொடா்ந்து சவால்களை எதிா்கொள்கிறது. இதற்கு திட்டமிட்ட தேதிக்குள் ஆணைகள் முடிக்கப்படுவதை உறுதி செய்ய கூட்டு முயற்சிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். எனவே, அனைத்து ஊழியா்களும் முழு உற்சாகத்துடனும், அா்ப்பணிப்புடனும் சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்றாா். விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.