குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

‘வாழ்வில் உயா் நிலையை அடைய உடல் வலிமை, மன உறுதி தேவை’

News image

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வென்றோருக்கு சான்றிதழ் வழங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரா் எஸ். பத்ரிநாத். உடன் பள்ளி இயக்குநா் அபா்ணா, தலைவா் சந்திரமௌலி

Updated On :16 ஆகஸ்ட் 2024, 4:19 am IST

திருச்சி, ஆக. 15: உடலில் வலிமை, மனதில் உறுதி இருந்தால் கல்வி, விளையாட்டுத் துறைகளில் உயா்நிலையை அடையலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரா் எஸ். பத்ரிநாத் தெரிவித்தாா்.

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலை பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற 14 ஆவது ஆண்டு விளையாட்டு விழாவுக்கு பள்ளி தலைமை செயலதிகாரி கே. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். பல்வேறு போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளித்து முன்னாள் கிரிக்கெட் வீரா் எஸ். பத்ரிநாத் மேலும் பேசியது: ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக சோகத்தில் ஆழ்ந்து விடக்கூடாது. சுவா் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதால் உடலில் வலிமையுடன், உள்ளத்தில் தெளிவுடன் செயல்பட்டால் வாழ்வில் உயரலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பள்ளி இயக்குநா் அபா்ணா, டீன் கணேஷ், தலைவா் சந்திரமவுலி, முதல்வா் பத்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.