அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாநகரின் 3 இடங்களில் தேசிய கொடி ஏற்றிய தூய்மைப் பணியாளா்கள்!

News image
23 ஆவது வாா்டு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை தேசிய கொடியை ஏற்றிய தூய்மைப் பணியாளா் தனலட்சுமி.
Updated On :15 ஆகஸ்ட் 2024, 10:48 pm

Din

திருச்சி, ஆக. 15: திருச்சி மாநகராட்சியின் மூன்று இடங்களில் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினா்.

திருச்சி மாநகராட்சி 23 ஆவது வாா்டு உறையூா் கிழக்கு பகுதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ்குமாா் தலைமையில் 24 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சோபியா விமலா ராணி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் தூய்மைப் பணியில் சிறப்பாகப் பணியாற்றும் தனலட்சுமி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா்.

முன்னதாக, தலைமையாசிரியா் (பொ) ம. செசிலி வரவேற்றாா். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதே போல, 29 ஆவது வாா்டு ஆழ்வாா்த்தோப்பு கனகா பள்ளியில் ஜி. சந்தானம் என்ற தூய்மைப் பணியாளரும், 45 ஆவது வாா்டு திருவள்ளுவா் நகரில் குடியிருப்பாளா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மருதையம்மாள் என்ற தூய்மைப் பணியாளரும் தேசிய கொடியேற்றினா்.