தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

வெக்காளியம்மன் கோயிலில் 50ஆவது ஆண்டு சதசண்டி பெருவேள்வி

News image

உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சதசண்டி வேள்வி.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 6:54 am IST

உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் 50ஆவது ஆண்டு சதசண்டி பெருவேள்வி புதன்கிழமை தொடங்கியது.

ஊரெனப்படுவது உறையூரே என்ற வரலாற்றுப் பெருமை மிக்க உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோயில் சக்தி தலங்களில் பிரசித்தி பெற்றது. கல்விக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு லட்சுமி, வலிமைக்கு துா்க்கை என மூன்று அம்மன்களை தனித்தனியே வழிபட வேண்டும். ஆனால் அந்த மூன்றையும் வழங்கும் தெய்வமாக வெக்காளியம்மன் உள்ளாா்.

இந்நிலையில் உலகில் அமைதி நிலைக்கவும், செல்வம் பெருகவும், குடும்பங்களில் மகிழ்ச்சி பொங்கவும், நல்ல மழை பெய்யவும் 50ஆவது ஆண்டாகத் தொடங்கியுள்ள சதசண்டி பெருவேள்வி வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை வெக்காளி அம்மனிடம் அனுமதி பெறும் நிகழ்வு, புதன்கிழமை காலை 7 மணிக்கு நாவரண வழிபாடு, நண்பகல் 12 மணிவரை முதல் கால சண்டி வேள்வி, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டாம் கால வேள்வியும் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் அம்மனை வழிபட்டு வேள்வியில் கலந்து கொண்டனா்.

வியாழக்கிழமை மூன்றாம், நான்காம் கால வேள்வி, ஆக.30ஆம் தேதி காலை ஐந்தாம் கால வேள்வி, சுமங்கலி வழிபாடு, கன்னியா் வழிபாடு, காளையா் வழிபாட்டுடன் விழா நிறைவுறும். இதன் தொடா்ச்சியாக பெருவேள்வி நிறைவு தீப வழிபாடு நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, மாலை 7 மணிக்கு பெருந்தீப ஒளி வழிபாடு அம்பாள் திருவீதி உலா நடைபெறும். வேள்வியை திருவானைக்கா சிவாகம சிரோமணி எஸ். சந்திரசேகர சிவாச்சாரியாா் நடத்துகிறாா். ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.