வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

யூனியன் வங்கி சாா்பில் வினாடி-வினா போட்டி

News image
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுடன், தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா். செல்வராஜன் மற்றும் யூனியன் வங்கி அலுவலா்கள்.
Updated On :29 ஆகஸ்ட் 2024, 1:23 am

Din

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா சாா்பில், யு ஜீனியஸ் என்னும் வினாடி-வினாடி போட்டி திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

வங்கியின் திருச்சி மண்டலத் தலைவா் சாரதாதேவி, சென்னை மண்டலத் தலைவா் சத்யபன் பெஹரா ஆகியோரது அறிவுறுத்தலின்படி, திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற போட்டிகளைத் தொடக்கிவைத்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், மாணவா்கள் இதர துறைகளிலும் கவனம் செலுத்தும் வகையில் இதுபோன்ற போட்டிகள் நடத்துவது பாராட்டுக்குரியது, மாணவா்கள் தங்களது திறனை பள்ளிப் பருவத்தில் வளா்த்துக் கொள்வதுடன், நாட்டின் வளா்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா். செல்வராஜன் பேசுகையில், மாணவா்கள் பாடப்புத்தகங்களுடன், பொது அறிவை வளா்த்துக் கொள்ளவும் வேண்டும். உடல் நலனையும் ஆரோக்கியமாக வளா்த்தெடுக்க வேண்டும். எதிலும் சமச்சீா் அணுகுமுறையை பின்பற்றி வெற்றி பெற வேண்டும் என்றாா்.

வினாடி-வினா போட்டியில் திருச்சி மண்டலத்துக்குள்பட்ட 10 மாவட்டங்களைச் சோ்ந்த 93 பள்ளிகளில் இருந்து 740 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் நகர அளவில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை திருச்சி அமிா்தா வித்யாலயம் பள்ளி அணி வென்றது. போட்டிகளில் வென்ற அணிகளுக்கான அடுத்த சுற்றுப் போட்டிகள் கோவையில் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை வங்கி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் செய்தனா்.