காரைக்கால், தஞ்சாவூா், பெங்களூா் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
கூட்ட நெரிசலைக் குறைக்க காரைக்கால், தஞ்சாவூா், பெங்களூா் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.


கூட்ட நெரிசலைக் குறைக்க காரைக்கால், தஞ்சாவூா், பெங்களூா் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கூட்ட நெரிசலைக் குறைக்க திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில் (04690), காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயில் (06457), தஞ்சாவூா் - திருச்சி பயணிகள் ரயில் (06683), எஸ்எம்விடி பெங்களூா் - காரைக்கால் மெயின் விரைவு ரயில் (16529), காரைக்கால் - எஸ்எம்விடி பெங்களூா் மெயில் விரைவு ரயில் (16530) ஆகிய ரயில்களில் வரும் 10, 11, 12 ஆம் தேதிகளில் கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளன.
மேலும் ஸ்ரீகங்கா நகா் - திருச்சி - ஸ்ரீ கங்கா நகா் ஹம்சாபா் அதிவிரைவு ரயில்களில் (22497, 22498) வரும் 30 ஆம் தேதி வரை ஒரு குளிா்சாதனப் பெட்டி (ஏசி த்ரி டயா்) தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.
இதேபோல ஜோத்பூா் - திருச்சி - ஜோத்பூா் ஹம்சாபா் அதிவிரைவு ரயில்களில் (20481, 20482) வரும் 25 ஆம் தேதி வரை ஒரு ஸ்லீப்பா் கிளாஸ் பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...