ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிறப்புக் காவல்படை காவலா் தற்கொலை

திருச்சியில் சிறப்புக்காவல் படைக் காவலா் ஒருவா் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:20 pm

Din

திருச்சியில் சிறப்புக்காவல் படைக் காவலா் ஒருவா் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள புதுச்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாா் (40). இவா் திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை (முதல் அணி) பயிற்சி மையத்துடன் கூடிய அலுவலகத்தின் முதல்நிலைக் காவலா். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் காவல் படை (பட்டாலியன்) வளாகம் எதிரேயுள்ள ரயில்வே மைதானத்தில் மயங்கிக் கிடந்த இவரை அருகிலிருந்தோா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சுகுமாா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.