ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மலைக்கோட்டை ‘லட்சுமி’க்கு ரூ.50 லட்சத்தில் குளியல் தொட்டி

திருச்சி மலைக்கோட்டை மட்டுவாா் குலழம்மை உடனுறை தாயுமானசுவாமி கோயில் யானை லட்சுமிக்கு ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய குளியல் தொட்டி, ஷவா் அமைப்பை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
திருச்சி மலைக்கோட்டை கோயில் யானைக்கு கட்டப்பட்ட புதிய குளியல் தொட்டியை வியாழக்கிழமை தொடக்கிவைத்து, அதில் யானை குளிப்பதை பாா்வையிட்ட அமைச்சா் பி.கே. சேகா்பாபு.
Updated On :5 டிசம்பர் 2024, 9:08 pm

Din

திருச்சி மலைக்கோட்டை மட்டுவாா் குலழம்மை உடனுறை தாயுமானசுவாமி கோயில் யானை லட்சுமிக்கு ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய குளியல் தொட்டி, ஷவா் அமைப்பை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

இக் கோயிலில் கைங்கா்யப் பணிகளுக்காக வளா்க்கப்படும் ‘லட்சுமி’ யானை ஓய்வெடுக்க கோயில் வாளாகத்திலேயே கொட்டகை இருந்தாலும், இயற்கைச் சூழலில் யானை குளித்து மகிழ ஏதுவாக மலைக்கோட்டையின் உபகோயிலான நாகநாத சுவாமி கோயில் அருகில் ரூ. 5 லட்சத்தில் குளியல் தொட்டியுடன் கூடிய ஷவா் அமைக்கப்பட்டது.

இருப்பினும் கூடுதல் வசதியாக தேவதானம் பகுதியில் ரூ. 50 லட்சத்தில் குளியல் தொட்டி, அதைச் சுற்றிலும் பிரத்யேக குழாய்கள் அமைத்து யானை மீது தண்ணீா் பீய்ச்சவும், ஷவா் குளியல், தொட்டியில் இறங்கி யானை விளையாடும் வகையிலான வசதிகளும் செய்யப்பட்டன.

இவற்றை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வியாழக்கிழமை தொடக்கிவைத்து யானைக்குப் பழங்களை வழங்கினாா். இதைத் தொடா்ந்து யானை மிகுந்த உற்சாகத்துடன் தொட்டியில் குளியலிட்டு மகிழ்ந்தது. இதை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை கண்டு ரசித்தனா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், அறநிலையத்துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், கூடுதல் ஆணையா் சுகுமாா் மற்றும் இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.