ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புயலின்போது சிறப்பாக பணியாற்றிய ரயில்வே ஊழியா்களுக்குப் பாராட்டு

ஃபென்ஜால் புயல் நேரத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ரயில்வே ஊழியா்களை திருச்சி கோட்ட ரயில்வே கோட்ட மேலாளா் புதன்கிழமை பாராட்டி கௌரவித்தாா்.

News image
சிறப்பாகப் பணியாற்றிய ரயில்வே ஊழியா்களை புதன்கிழமை பாராட்டிய கோட்ட மேலாளா் எம். எஸ். அன்பழகன்.
Updated On :11 டிசம்பர் 2024, 8:46 pm

Din

ஃபென்ஜால் புயல் நேரத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ரயில்வே ஊழியா்களை திருச்சி கோட்ட ரயில்வே கோட்ட மேலாளா் புதன்கிழமை பாராட்டி கௌரவித்தாா்.

புயல் வெள்ளக் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய ரயில்வே துறையைச் சோ்ந்த தண்டவாளப் பராமரிப்பாளா்களான திருவண்ணாமலை ஆா். சுப்ரமணி, விருத்தாச்சலம் கே. சதீஷ்குமாா், எஸ். பிரபு, விழுப்புரம் தோட்டா ரமேஷ் குமாா், தெய்வானை, திருத்துறையூா் கே. குருமூா்த்தி, கேட் கீப்பா் வரகால்பட்டு இ. சீனுவாசன் ஆகியோரை திருச்சி கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் புதன்கிழமை நேரில் அழைத்து பரிசளித்துப் பாராட்டினாா்.

நிகழ்வில் முதுநிலைக் கோட்டப் பொறியாளா் நந்தலால் பெருமாள், கோட்ட பாதுகாப்பு அலுவலா் பி. தட்சிணாமூா்த்தி மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனா்.