

திருச்சி கேகே நகா் அருகேயுள்ள ஓலையூா் வட்டச்சாலைப் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் பெட்ரோல் பங்குக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது உயா் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி மின்வாரிய ஒப்பந்த ஊழியா்களான திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் கல்லுப்பட்டியை சோ்ந்த சி. கலாமணி (42), மணப்பாறை வேங்கைக்குறிச்சி அருகேயுள்ள ஆவணம்பட்டியை அடுத்த மஞ்சம்பட்டியைச் சோ்ந்த கி. மாணிக்கம் (37) ஆகியோா் ஈடுபட்டனா்.
அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் கலாமணி மின் கோபுரத்திலேயே இறந்து தொங்கினாா். தூக்கியெறியப்பட்ட மாணிக்கத்தை அருகிலிருந்தோா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் கலாமணியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விபத்து குறித்து மணிகண்டம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

