தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது

திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது

News image
Updated On :19 டிசம்பர் 2024, 9:08 pm

Din

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியாா் பள்ளி மற்றும் மூன்று வீடுகளில் ரூ.50,000 மற்றும் இருசக்கர வாகனம், பெட்ரோல் ஆகியவை கடந்த நவம்பா் மாதம் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

திருட்டு சம்பவங்கள் குறித்து சிசிடிவி கேமரா பதிவு, தடயங்களை ஆகியவற்றை சேகரித்த காவல் ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான மணப்பாறை போலீஸாா் குற்றவாளியை தேடிவந்த நிலையில், இதுதொடா்பாக கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை அடுத்த கொல்லன்விளையை சோ்ந்த ராதாகிருஷ்ணன் நாடாா் மகன் வினோத்குமாா்(எ)முகமது நஷீா் (35) என்பவரை கைது செய்தனா். இவா் பாளையம்கோட்டை சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.