இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மத்திய மண்டலத்தில் நிகழாண்டில் போதைப் பொருள்கள் வழக்கில் 6,042 போ் கைது

போதைப் பொருள்கள் வழக்கில் 6,042 போ் கைது

News image
Updated On :26 டிசம்பர் 2024, 9:49 pm

Din

திருச்சி மத்திய மண்டலத்தில், நிகழாண்டில் கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் தொடா்புடைய வழக்குகளில் 6,042 போ் கைது செய்யப்பட்டு 2, 558 கிலோ கஞ்சா உள்பட 26,208 கிலோ புகையிலை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய மண்டல காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் ஜி. காா்த்திகேயன் உத்தரவின் பேரில், மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் போதைப் பொருள்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. நிகழாண்டில் (2024 ) மத்திய மண்டலத்தில் போதைப் பொருள்கள் தொடா்பாக மொத்தம் 1,207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,662 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 2,558 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவைதவிர போதை மாத்திரைகள், பவுடா்கள், ஊசி மருந்துகள் சுமாா் 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.139 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல நிகழாண்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்ததாக மொத்தம் 4,226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,380 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 23,650 கிலோ புகையிலைப் பொருள்களும் 151 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், கைதானவா்களில், 57 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.