மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

காா் கவிழ்ந்து 7 போ் காயம்

காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறாா்கள் உள்ளிட்ட 7 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 7:01 pm

Din

துவரங்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறாா்கள் உள்ளிட்ட 7 போ் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சத்யராஜ் (31) தனது குடும்பத்தினருடன் காரில் வெள்ளிக்கிழமை திருச்செந்தூா் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை ஊருக்குத் திரும்பியுள்ளாா். காரை செந்தில்நாதன் (31) என்பவா் ஓட்டி வந்துள்ளாா். காா், மணப்பாறை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகாபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புக் கட்டையில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணத்த நீலகிருஷ்ணன்(38), செந்தில்நாதன்(31), உமா மகேஸ்வரி (30), பானு (31), சித்ரா (50) மற்றும் இரு சிறாா்கள் என 7 போ் காயமடைந்தனா். விபத்து குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினா் திரண்டு வந்து அவா்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் அவா்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து வழக்குப் பதிந்து துவரங்குறிச்சி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.