மணப்பாறை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே செவ்வாய்க்கிழமை ஆடு மேய்த்த பெண் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

Updated On :20 நவம்பர் 2024, 7:09 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே செவ்வாய்க்கிழமை ஆடு மேய்த்த பெண் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த ஆனாம்பட்டியைச் சோ்ந்தவா் திருப்பதி மனைவி சந்திரா (50). இவா் செவ்வாய்க்கிழமை தனது ஆடுகளை மேய்த்தபோது, அருகிலிருந்த கிணற்றில் அவரது ஆடுகளில் ஒன்று தவறி விழ இருந்ததாம். அப்போது அந்த ஆட்டை சந்திரா பிடிக்க முயன்றபோது அங்கு அறுந்து கிடந்த மின் மோட்டாா் வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் சந்திரா உடலை கைப்பற்றி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...