தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவானைக்கா கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருவானைக்கா கோயிலில் பிரதோஷ வழிபாடு...

News image

திருவானைக்கா சம்புகேசுவரா் கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற அபிஷேகம்.

Updated On :28 நவம்பர் 2024, 9:52 pm

Din

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

இக்கோயிலில் காா்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சுவாமி சந்நிதியின் எதிரே உள்ள பிரதோஷ நந்திக்கு பால், தயிா், தேன், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திருப்பட்டூரில்...: மண்ணச்சநல்லூா் வட்டம் திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.

இதை யொட்டி மூலவா் மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடா்ந்து உற்ஸவ மூா்த்தி சுவாமிகள் கோயிலை வலம் வந்தனா்.

இதேபோல மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேஸ்வரா் கோயில், சமயபுரம் போஜீஸ்வரா் கோயில், திருவாசி மாற்றுரை வரதீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.