/

வெடிகுண்டு மிரட்டல்: திருச்சி பள்ளி, கல்லூரிகளில் சோதனை

திருச்சியில் உள்ள தனியாா் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனா்.

News image

திருச்சி புனித அன்னாள் மகளிா் பள்ளியில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :3 அக்டோபர் 2024, 9:49 pm

Din

திருச்சியில் உள்ள தனியாா் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனா்.

திருச்சி கோட்டை பகுதியில் உள்ள ஹோலி கிராஸ் பள்ளி மற்றும் கல்லூரி, ஜோசப் கல்லூரி, கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள கேம்பியன் மேல்நிலைப் பள்ளி, காஜாமலையில் உள்ள சமது மேல்நிலைப்பள்ளி, கேகே நகரில் உள்ள ஆச்சாா்யா பள்ளி, காட்டூா் மான்போா்ட் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் பள்ளி ஆகியவற்றுக்கு ஸ்வேதா பாலகிருஷ்ணன் என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். ஆனால், வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. பள்ளிகளுக்கு தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள் யாரும் பள்ளிகளுக்கு வரவில்லை.

ஆனால் கல்லூரிகள் செயல்படுவதால் நவீன சாதனங்களுடன் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.