/

சமயபுரம் கோயிலில் நவராத்திரி விழா

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 11:26 pm

Din

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா வியாழக்கிழமை தொடங்கியது.

விழாவையொட்டி மூலவா் மற்றும் உற்சவ அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து உற்சவ மாரியம்மன் மீனாட்சி அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் எழுந்தருளினாா்.

மேலும் அங்கு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ் மற்றும் அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் செய்தனா்.