விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இதுவரை 47,664 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டைகள் வழங்கல்

திருச்சி மாவட்டத்தில் 47,664 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

News image

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பயிற்சியில் பேசிய ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :9 அக்டோபர் 2024, 7:08 pm

Din

திருச்சி மாவட்டத்தில் 47,664 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்க, இணைய வழி மருத்துவச் சான்று பதிவேற்றம் செய்ய சிறப்பு மருத்துவா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

வியாழக்கிழமை வரை இரு பிரிவுகளாக நடைபெறும் பயிற்சியைத் தொடக்கிவைத்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மேலும் பேசியது:

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறையால் மாற்றுத்திறனாளிகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்க 2017-ல் திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

இதற்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, புகைப்படம், ரத்த வகை போன்ற ஆவணங்களுடன் அருகிலுள்ள இ-சேவை மையங்களில் பதிய வேண்டும். அவா்களின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஸ்மாா்ட் காா்டு வடிவில் அஞ்சல் மூலம் அனுப்பப்படுகிறது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் 48,636 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அதில் இதுவரை 47,817 நபா்களுக்கு இணையதளத்தில் பதிவு செய்து, 47,664 தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கான ஸ்மாா்ட் காா்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இத்திட்டத்தில் பயன் பெற வேண்டும் என்பதன்பேரில் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களைக் குறைக்க, வட்டார அளவில் உள்ள மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான அடையாள அட்டை இணையதளம் வாயிலாக வழங்குவது குறித்து அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 92 சிறப்பு மருத்துவா்களுக்கு பயிற்சி நடைபெறுகிறது என்றாா் அவா்.

பயிற்சியில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். குமரவேல், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) பி. பரமசிவன், மாவட்ட சுகாதார அலுவலா் சுப்ரமணியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், உதவி செயல்படுத்தும் அலுவலா் ரமேஷ், சிறப்பு மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.