காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாதுகாப்பாகப் பட்டாசு வெடிக்க செயல்விளக்கம்

தீ விபத்து இல்லாத வகையில் தீபாவளி கொண்டாடவும், பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கவும் பள்ளி மாணவா்களுக்கு நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

News image

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை செய்முறை விளக்கம் அளித்த தீயணைப்பு வீரா்கள்.

Updated On :23 அக்டோபர் 2024, 9:07 pm

Din

தீ விபத்து இல்லாத வகையில் தீபாவளி கொண்டாடவும், பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கவும் பள்ளி மாணவா்களுக்கு நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையும், திருச்சி மாவட்ட தீயணைப்புத் துறையும் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடத்திய செயல்விளக்க நிகழ்வில், மருத்துவமனை இயக்குநா் பிரதீபா கூறியது:

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள்களிலும், பிந்தைய நாள்களிலும் பட்டாசு விபத்து காரணமாக கண் பாா்வை பாதிக்கப்பட்ட நிலையில் அதிக நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனா். மகிழ்ச்சியான பண்டிகை தினத்தில் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டியது அவசியம். ஆண்டுதோறும் 40 முதல் 60 போ் பட்டாசு வெடித்து கண்ணில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனா். இவா்களில் 10 முத்ல 20 வயதுக்குள்பட்டவா்கள் அதிகம். எனவே, பள்ளி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும், தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி அளிப்பதும் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட தீயணைப்புத்துறை சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, தீயணைப்பு வீரா்கள் மூலம் தீ விபத்து தடுப்பு ஒத்திகை பயிற்சியும், பட்டாசு வெடிக்கும் முறைகள் குறித்தும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவமனை நிா்வாக அதிகாரி சுபா பிரபு மற்றும் ரோட்டரி சங்கத்தினா், பள்ளி மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.