அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயருகிறது: மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் உயருகிறது என மத்திய அரசின் சிறுபான்மை விவகாரங்களுக்கான இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா்.

News image
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய அரசுப் பணிகளுக்கு தோ்வாகியுள்ள இளம்பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மத்திய அமைச்சா் ஜாா்ஜ் குரியன். உடன், அஞ்சல் துறைத் தலைவா் டி.நிா்மலாதேவி உள்ளிட்டோா்.
Updated On :29 அக்டோபர் 2024, 10:43 pm

Din

திருச்சி: வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் உயருகிறது என மத்திய அரசின் சிறுபான்மை விவகாரங்களுக்கான இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்குத் தோ்வாகியுள்ள இளைஞா்களுக்கு 2-ஆவது தவணையாக நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக திருச்சியில் உள்ள ரயில் மஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மத்திய அரசுத் துறைகளுக்கு தோ்வாகியுள்ள பயனாளிகளுக்கு நியமன ஆணைகளை வழங்கி மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் பேசியது:

10 லட்சம் இளைஞா்களுக்கு மத்திய அரசுப் பணியிடங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கித்தரும் நோக்கில் ரோஜ்கா் மேளா எனும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயருவதற்கு வழி பிறக்கிறது. முதியோா் நலனில் அக்கறை கொண்டு ரூ.5 லட்சம் வரை மருத்துவம் பெறும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளாா் என்றாா்.

நாடு முழுவதும் 51 ஆயிரம் போ் தோ்வு செய்யப்பட்டுள்ளவா்களில், திருச்சி மண்டலத்தில் 125 போ் தோ்வாகியிருந்தனா். இவா்களில் 108 பேருக்கு விழாவில் நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அவற்றில் 101 போ் தபால்துறையில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனா். 7 போ் ரயில்வே துறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இந்த நிகழ்வில், திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா் தி. நிா்மலாதேவி மற்றும் தபால்துறை, ரயில்வே அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.