ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

போக்குவரத்து சிக்னல் கோரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சியில் தனியாா் கல்லூரி அருகே போக்குவரத்து சிக்னல் அமைக்கக் கோரி மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

News image
காட்டூா் கல்லூரி அருகே போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட மாணவ, மாணவியா்.
Updated On :5 செப்டம்பர் 2024, 11:22 pm

Din

திருச்சியில் தனியாா் கல்லூரி அருகே போக்குவரத்து சிக்னல் அமைக்கக் கோரி மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

திருச்சி, காட்டூா் உருமு தனலட்சுமி கல்லூரி அருகே நடந்த விபத்தில் அக்கல்லூரி மாணவா் சஞ்சய் காயமடைந்து சிகிச்சை பெறுகிறாா். இதையடுத்து அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்.

மேலும் காயமடைந்த மாணவருக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முன் போராட்டம் நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவ, மாணவியா், இந்திய மாணவா் சங்கத்தினா் உள்ளிட்ட சுமாா் 200 மேற்பட்டோா் பங்கேற்றனா்.