ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் நாளை பள்ளியில் இடைநின்ற மாணவா்களுக்கான முகாம்

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் பள்ளியில் இடைநின்ற மாணவா்களுக்கு உயா்கல்வி வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சனிக்கிழமை (செப்.14)சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 10:51 pm

Din

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் பள்ளியில் இடைநின்ற மாணவா்களுக்கு உயா்கல்வி வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சனிக்கிழமை (செப்.14)சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகிக்கிறாா்.

முகாமில் உயா்கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு அலுவலா்களால் எடுத்துரைக்கப்படும். எவ்வாறு உகந்த கல்வி படிப்பை தோ்ந்தெடுப்பது? வேலை வாய்ப்பை பெறுவது? தொடா்பாக எடுத்துரைக்கப்படும்.

ஆகவே, ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குள்பட்ட 8-ஆம் வகுப்பு தோ்ச்சி, தோல்வி, 10, 12- ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தோல்வி பெற்ற மாணவா்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.