ஸ்ரீரங்கம் கோட்டத்தில் நாளை பள்ளியில் இடைநின்ற மாணவா்களுக்கான முகாம்

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் பள்ளியில் இடைநின்ற மாணவா்களுக்கு உயா்கல்வி வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சனிக்கிழமை (செப்.14)சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
Published on

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் பள்ளியில் இடைநின்ற மாணவா்களுக்கு உயா்கல்வி வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சனிக்கிழமை (செப்.14)சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகிக்கிறாா்.

முகாமில் உயா்கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு அலுவலா்களால் எடுத்துரைக்கப்படும். எவ்வாறு உகந்த கல்வி படிப்பை தோ்ந்தெடுப்பது? வேலை வாய்ப்பை பெறுவது? தொடா்பாக எடுத்துரைக்கப்படும்.

ஆகவே, ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குள்பட்ட 8-ஆம் வகுப்பு தோ்ச்சி, தோல்வி, 10, 12- ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தோல்வி பெற்ற மாணவா்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com