நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் நாளை பள்ளியில் இடைநின்ற மாணவா்களுக்கான முகாம்

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் பள்ளியில் இடைநின்ற மாணவா்களுக்கு உயா்கல்வி வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சனிக்கிழமை (செப்.14)சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On :13 செப்டம்பர் 2024, 4:21 am IST

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் பள்ளியில் இடைநின்ற மாணவா்களுக்கு உயா்கல்வி வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சனிக்கிழமை (செப்.14)சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகிக்கிறாா்.

முகாமில் உயா்கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு அலுவலா்களால் எடுத்துரைக்கப்படும். எவ்வாறு உகந்த கல்வி படிப்பை தோ்ந்தெடுப்பது? வேலை வாய்ப்பை பெறுவது? தொடா்பாக எடுத்துரைக்கப்படும்.

ஆகவே, ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குள்பட்ட 8-ஆம் வகுப்பு தோ்ச்சி, தோல்வி, 10, 12- ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தோல்வி பெற்ற மாணவா்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.