கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சமயபுரம் கோயிலில் காணிக்கை தங்கம் அளவீட்டுப் பணி நிறைவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக அளித்த தங்கத்தைத் தரம் பிரித்து அளவிடும் பணி புதன்கிழமை நிறைவுற்றது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:27 pm

Din

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக அளித்த தங்கத்தைத் தரம் பிரித்து அளவிடும் பணி புதன்கிழமை நிறைவுற்றது.

பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் உண்டியலில் நோ்த்திக் கடனாகவும், காணிக்கையாகவும் செலுத்தியுள்ள பல மாற்றுப் பொன் இனங்களில் கோயிலுக்கு உபயோகிக்க இயலாத இனங்களை அரசாணை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உத்தரவுப்படி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜூ, ஓய்வு பெற்ற உயா் நீதிமன்ற நீதிபதிகள் கே. ரவிச்சந்திரபாபு, ஆா். மாலா ஆகியோா் மேற்பாா்வையில் பொன் இனங்கள் மொத்த எடை 554 கிலோ 717 கிராமிலிருந்து கற்கள், அரக்கு, அழுக்கு இதர உலோகங்களை நீக்கும் பணியானது செப்.9 முதல் செப்.18 வரை தக்க பாதுகாப்பு வசதியுடன் கோயிலில் ஆயுதம் ஏந்திய போலீஸாா் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தி மேற்கொள்ளப்பட்டது.

மேற்கண்ட 554 கிலோ 717 கிராமிலிருந்து கற்கள், அரக்கு, அழுக்கு இதர உலோகங்கள் நீக்கி கிடைக்கப்பெற்ற பலமாற்று பொன் நிகர எடை 526 கிலோ 435 கிராம் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையா் சி. கல்யாணி, சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ், சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன் மற்றும் அறங்காவலா்கள், அறநிலையத் துறை அலுவலா்கள், திருச்சி, நாகை, மற்றும் வேலூா் மண்டல நகை மதிப்பீட்டு வல்லுநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.