தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காதலா்களைத் தாக்கிய மூவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காதலா்களைத் தாக்கிய மூவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:33 pm

Din

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காதலா்களைத் தாக்கிய மூவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் சொரியம்பட்டியை சோ்ந்த சந்தோஷ், அதே பகுதியைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகள் திரிஷா. காதலா்களான இருவரும் கடந்த செப். 14-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி மதுரை இலுப்பைக்குளத்தில் தங்கியிருந்தனா்.

இந்நிலையில் திரிஷா இனத்தை சோ்ந்த மூக்கையா மகன் அருணகிரி (35) மற்றும் அவரது நண்பா்கள் கணேசன் மகன் பிரவீன்குமாா்(24), அழகா்சாமி மகன் காா்த்திக்(38) ஆகியோா் இலுப்பைக்குளத்துக்கு சென்று காதலா்களை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கொண்டு வரும் வழியில் இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் சந்தோஷிடமிருந்து ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் கைப்பேசியை பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பின் துவரங்குறிச்சி அருகே சந்தோஷை அவரது பெற்றோருடன் அனுப்பினா். மேலும் சந்தோஷ் வீட்டுக்கு சென்று அவரை அடித்து, கொலை மிரட்டலும் விடுத்தனராம். இதில் சந்தோஷ் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து புதன்கிழமை வழக்கு பதிந்த வளநாடு போலீஸாா், அருணகிரி, பிரவீன்குமாா் மற்றும் காா்த்திக் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.