கடைமடைக்கு தண்ணீா் வரத் தடையாக உள்ள குழாய்களை அகற்றக் கோரி மனு
கட்டளை மேட்டு வாய்க்காலில் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் வந்து சேரத் தடையாக 2 இடங்களில் உள்ள குழாய்களை அகற்றக் கோரி பொதுப்பணித் துறையிடம் விவசாயிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.


கட்டளை மேட்டு வாய்க்காலில் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் வந்து சேரத் தடையாக 2 இடங்களில் உள்ள குழாய்களை அகற்றக் கோரி பொதுப்பணித் துறையிடம் விவசாயிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்துக்கு தமாகா விவசாய அணி மாவட்டத் தலைவா் புங்கனூா் எஸ். செல்வம் தலைமையில், வழக்குரைஞா் செந்தில்குமாா், நா. ராஜேந்திரன் மற்றும் கட்டளைமேட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஆா். தயாளகுமாா் ஆகியோா் கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்று கொண்ட அவா், பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
இதுதொடா்பாக பாசன விவசாயிகள் சாா்பில் தமாகா விவசாய அணி மண்டல துணைத் தலைவா் ந. ராஜேந்திரன் கூறுகையில், கடைமடைக்கு தண்ணீா் செல்வதற்கு குறுக்கீடாக கருங்காலப்பள்ளி, இனக்கூா் சுக்காம்பட்டி ஆகிய 2 இடங்களில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப் பாலமானது பாசன வாய்க்காலின் குறுக்கே செல்கிறது.
எனவே, கால்வாய் தண்ணீா் செல்ல இங்கு குழாய் அமைத்துள்ளனா். ஆனால் இந்த குழாய் வழியாக தண்ணீா் அழுத்தத்துடன் வெளியேற முடியவில்லை. எனவே, கட்டளை மேட்டு வாய்க்காலில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் வருவது சிக்கலாகியுள்ளது என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...