கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஜங்ஷன், கருமண்டபம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி ஜங்ஷன் முன்புறம், கருமண்டபம் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

News image

திருச்சி ரயில் நிலையம் முன் சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

Updated On :18 செப்டம்பர் 2024, 10:02 pm

Din

திருச்சி ஜங்ஷன் முன்புறம், கருமண்டபம் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்புறம் ஆக்கிரமித்து உணவு கடை, பழக்கடை, பெட்டிக்கடை என 30 க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த 25 ஆண்டுகளாக செயல்படுகின்றன. இக் கடைகளுக்கு பிற்பகல் நேரத்தில் வரும் நூற்றுக்கணக்கானோா் தங்கள் வாகனங்களை சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்துகின்றனா். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊா்ந்து செல்கின்றன. இதேபோல, கருமண்டபம் சாலையின் இருபுறமும் சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகி வருகிறது.

இதுதொடா்பாக மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறையினருக்கு தொடா்ந்து வந்த புகாா்களின்பேரில் மாநகராட்சி, மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என கடை உரிமையாளா்களுக்கு கடந்த 3 நாள்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பினா்.

அக் காலக்கெடு முடிந்ததால் புதன்கிழமை காலை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் ரயில்வே ஜங்ஷன் முன்புறமுள்ள 50 கடைகள், கருமண்டபத்தில் சாலையின் இருபுறமும் உள்ள 65 கடைகளின் முன்புறம் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.

அப்போது ஒரு சில கடைக்காரா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.