இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நிதி நிறுவன ஊழியரின் ரூ. 75 ஆயிரம் திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நிதி நிறுவன ஊழியா் வைத்திருந்த ரூ.75 ஆயிரத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:23 pm

Din

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நிதி நிறுவன ஊழியா் வைத்திருந்த ரூ.75 ஆயிரத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி மேற்குத்தெருவைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி மகன் காா்த்திகேயன்(36). அந்த பகுதி நிதி நிறுவன ஊழியரான இவா் வியாழக்கிழமை கோவில்பட்டி பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு கடைகளில் வசூலில் இருந்தபோது, பைக்கில் வந்த மா்மநபா்கள் காா்த்திகேயன் வாகனத்திலிருந்த ரூ.75 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.

இச்சம்பவம் குறித்து காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில் வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரித்து வருகின்றனா்.