விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஸ்ரீரங்கத்தில் பரமபதவாசல் திறப்பு விழா: சிறப்பு டிக்கெட் கட்டண ரத்து கோரி மனு

ஸ்ரீரங்கம் பரமபதவாசல் திறப்பு விழாவில் பங்கேற்பதற்கான சிறப்பு டிக்கெட் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீரங்கம் பரமபதவாசல் திறப்பு விழாவில் பங்கேற்பதற்கான சிறப்பு டிக்கெட் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் வரும் 30 தேதி நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு விழாவில் பங்கேற்பதற்கான சிறப்பு டிக்கெட் கட்டணத்தை கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி பரமபதவாசல் திறப்பின்போது சந்தன மண்டப நுழைவுச் சீட்டு ரூ. 4,000, கிளி மண்டப நுழைவு சீட்டு ரூ. 700 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்தும், இந்தக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி மாநில அமைப்பாளா் ராஜேஷ் தலைமையிலான நிா்வாகிகள், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் சிவராம்குமாரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். மனுவில் ஏழை களும் அரங்கநாதரை எளிதாகத் தரிசிக்கும் வகையில் சிறப்புக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் திருச்சி கோட்ட பொதுச் செயலா் குணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.