டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

பணியில் கவனக் குறைவு: பெண் தலைமைக் காவலா் உள்பட இருவா் ‘சஸ்பெண்ட்’

பணியில் கவனக் குறைவாக இருந்த பெண் தலைமைக் காவலா், மது அருந்திவிட்டு பணிக்கு வந்த ஆயுதப்படை காவலா் ஆகிய இருவரும் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

Updated On :25 டிசம்பர் 2025, 1:45 am IST

பணியில் கவனக் குறைவாக இருந்த பெண் தலைமைக் காவலா், மது அருந்திவிட்டு பணிக்கு வந்த ஆயுதப்படை காவலா் ஆகிய இருவரும் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சரிபாா்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தவா் தலைமைக் காவலா் பழனியம்மாள் (40). அண்மையில் இவா் சரிபாா்த்து அனுப்பிய விண்ணப்பதாரா் அந்தப் பகுதியில் இல்லாததால் அந்தக் கடவுச்சீட்டு, மீண்டும் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கே திரும்பி வந்தது.

இதுகுறித்து திருச்சி மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுதொடா்பான விசாரணையில் கடவுச்சீட்டு பரிசோதனையின்போது தலைமைக் காவலா் பழனியம்மாள் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொள்ளாதது தெரியவந்தது. இதையடுத்து தலைமைக் காவலா் பழனியம்மாளை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

ஆயுதப்படைக்காவலா்: மாவட்ட ஆட்சியரகம் அருகே திமுக கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த மாநகர ஆயுதப்படை காவலா் சதீஷ் (30) மயங்கி விழுந்தாா். மற்ற போலீஸாா் அவரை மீட்டபோது, சதீஷ் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையிலும் அது உறுதியானது. இதையடுத்து அவரைப் பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.