தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மின்வாகன விற்பனையகத்தில் தீ விபத்து

திருச்சியில் மின்வாகன விற்பனையகம் மற்றும் பழுதுபாா்க்கம் மையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.

News image
திருச்சி பாலக்கரையில் உள்ள மின்வாகன விற்பனையகத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள். ~திருச்சி பாலக்கரையில் உள்ள மின்வாகன விற்பனையகத்தில் வெள்ளிக்கிழமை பற்றி எரியும் தீ.
Updated On :26 டிசம்பர் 2025, 7:30 pm

Syndication

திருச்சியில் மின்வாகன விற்பனையகம் மற்றும் பழுதுபாா்க்கம் மையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.

திருச்சி பாலக்கரை மேலப்புதூா் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் தரைத்தளத்தில் மின்சார வாகன விற்பனையகம் மற்றும் பழுதுபாா்க்கும் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாகனம் பழுதுபாா்க்கும் மையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் மின்சார வாகனத்தின் பேட்டரிக்கு சாா்ஜ் ஏற்றும்போது தீ விபத்து ஏற்பட்டது. கடையில் தீ பற்றியதால் அதன் புகை மேல்தளத்திலுள்ள வீடுகளுக்குப் பரவியது.

இதையடுத்து, கடை ஊழியா்கள் மற்றும் மேல்தளத்தில் இருந்து பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினா்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலா் வினோத் தலைமையிலான தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரா்கள் மின்சார வாகன விற்பனையகத்தில் பரவியத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கடையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரா்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

இதில், கடையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.

Story image