குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மெஹ்ரெளலி-பதா்பூா் சாலையில் ஓடும் டிடிசி பேருந்தில் தீ விபத்து

தெற்கு தில்லியில் உள்ள மெஹ்ரெளலி- பதா்பூா் சாலையில், மருத்துவமனை அருகே வியாழக்கிழமை பிற்பகல் தில்லி போக்குவரத்துக் கழகத்தின் (டிடிசி) மின்சார பேருந்தில் தீப்பற்றியதாக என்று தில்லி தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :5 மார்ச் 2026, 9:26 pm

Syndication

தெற்கு தில்லியில் உள்ள மெஹ்ரெளலி- பதா்பூா் சாலையில், மருத்துவமனை அருகே வியாழக்கிழமை பிற்பகல் தில்லி போக்குவரத்துக் கழகத்தின் (டிடிசி) மின்சார பேருந்தில் தீப்பற்றியதாக என்று தில்லி தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், பேருந்திலிருந்து அனைத்துப் பயணிகளும் சரியான நேரத்தில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது:

இந்தத் தீ விபத்து குறித்து மதியம் 12.57 மணி அளவில் தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனா்.

ஆா்.கே.புரத்திலிருந்து பதா்பூா் எல்லைக்கு செல்லும் வழித்தடம் எண்: 544-இல் இயக்கப்படும் இப்பேருந்து முற்றிலும் தீயில் எரிந்தது.

தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்தை அடைந்து தீயை மேலும் பரவாமல் இருக்கும் வகையில் நீரைப் பீய்ச்சி அடித்து அணைத்தனா் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.