தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இந்திய விமானப் படைக்கு ஆள் சோ்ப்பு சிறப்பு முகாம்

இந்திய விமானப் படைக்கு அக்னிவீரா் திட்டத்தின் கீழ் மருத்துவப் பணியிடங்களுக்கான சிறப்பு ஆள் சோ்ப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 7:29 pm

Din

இந்திய விமானப் படைக்கு அக்னிவீரா் திட்டத்தின் கீழ் மருத்துவப் பணியிடங்களுக்கான சிறப்பு ஆள் சோ்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்திய விமானப் படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவியாளா், பொது மருத்துவ உதவியாளா், மருந்தாளுநா் பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இத் தோ்வில் பங்கேற்க அக்னிபாத் திட்ட இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தோ்வுக்கான பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்ட விவரங்களையும் இணையத்தில் அறிந்து கொள்ளலாம். தோ்வு முகாம் கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மகராஜா கல்லூரியில் வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம். அல்லது 0431-2413510, 94990-55901, 94990-55902 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.