தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஸ்ரீரங்கம் பரமபதவாசல் திறப்பு இன்று உள்ளூா் விடுமுறை

ஸ்ரீரங்கத்தில் பரமபதவாசல் திறப்பை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன.10) திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2025, 8:14 pm

Din

ஸ்ரீரங்கத்தில் பரமபதவாசல் திறப்பை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன.10) திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான பரமபத வாசல் திறக்கும் நிகழ்வை முன்னிட்டு, மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூா் விடுமுறைக்கு மாற்று வேலை நாளாக ஜன.25 ஆம் தேதியை மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.17ஆம் தேதி அரசு அறிவித்த விடுமுறையை ஈடு செய்ய ஜன.25 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஸ்ரீரங்கம் விழாவுக்காக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூா் விடுமுறைக்கு ஈடாக பிப்.1ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுவதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.